Tamil News | Pudhiyaboomi News

Friday 11 July 2014

எச்சரிக்கைச் செய்தி..!

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்..
எச்சரிக்கைச் செய்தி..!
முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'
என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...
ஆம்...!
அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..
நன்றாக யோசித்துப் பாருங்கள்...
ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!
தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்
இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க, அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..
ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)
மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..
அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...
அப்போதுதான் அவருக்கு உறைத்தது..
# Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..
அதன்பிறகு, உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும்மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..
இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..
இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,
இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..
இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..
இதற்கு, நமது # பெண்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது' (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..
அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால்,
# உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..
இதுதான் மிகச்சிறந்தவழி..
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..
இது பெண்களுக்கு மட்டுமல்ல..
எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..
பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு, இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம்..
தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
நன்றி - (சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)

Tuesday 3 June 2014

குலம், கோத்திரம் – சில அடிப்படை விஷயங்கள்

நாம இன்னைக்கு வரலாற்று புஸ்தகத்துல படிக்கும் இந்தியா என்பது ஐரோபியர்கள் நமக்கு வைத்த பேர். நம்ம பழமையான பெயர் பாரதம். கொங்க வெள்ளாளர்களின் கல்யாணங்களில் பாடப்படும் கம்பர் எழுதிய மங்கல வாழ்த்தில் நாவிதர் “பாரத தேசம் பண்புடன் வாழி” என்று வாழ்த்துவர்.
இப்படி பாரத வர்ஷத்தை ஆட்சி செய்த சத்திரியர்கள் அனைவரும்,
சூரிய வம்சம், சந்திர வம்சம், அக்னி வம்சம் ஆகிய மூன்று வம்சத்தை சேர்ந்தவர்களே.
பண்டைய கால தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சேரர்கள் அக்னி வம்சத்தையும், சோழர்கள் சூரிய வம்சத்தையும், பாண்டியர்கள் சந்திர வம்சத்தையும், சேர்ந்வர்கள்.
கொங்கதேசம் இயற்கையும் அதிலிருந்து உருவான நாகரீகத்தையும் அடிப்படையாக கொண்டு உருவானவை. இப்படி ராஜ்ஜியம் உருவாக்கி நாகரீக வாழ்க்கை தொடங்கிய பொழுது, பெரும் பஞ்சம் ஏற்படவே மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதற்காக கங்கைகரையில் மாயவரால் தோற்றுவிக்கபட்டவர்களே கங்கா குல வெள்ளாளர்கள் என்று
“மரபாள சூளாமணி” நூல் கூறுகிறது. போதாயனர் என்னும் மகரிஷியால் வெள்ளாமை பயிற்றுவிக்கப்பட்டு, வழி வழியாக குலதொழிலாக செய்து வருகின்றனர்.
ஆதியில், கோசல தேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரிய வம்சத்து அரசி கங்கையில் நீராடுகையில் குழந்தை பிறந்தது. கங்கை அளித்த மகன் என்பதால் அவனை கங்கத்தான் என்று அழைத்தனர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும் சூட்டி போதாயனர் மகரிஷி சகல விஷயங்களையும் பயிற்றுவித்தார். இம்மரபாளன் வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கபடுகின்றனர். இவர்களை அவந்தி தேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால், தெற்கே காஞ்சி நகரையும், அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதியான தென்பெண்ணை ஆற்றின் வட பகுதியில் வாழ்ந்து வருகையில், கரிகால சோழனது இரண்டாவது மகனும், தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை பிரித்து தொண்டைநாடு என்று பெயர் சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறை தவறி பிறந்த அவன், கொங்கர் வீட்டில் பெண் கேட்க, அவனுக்கு பெண் கொடுக்க விருப்பமில்லாமல் கருநாயை கட்டி வைத்துவிட்டு, கொங்கர்கள் வடதிசை நோக்கி இடம் பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களின் அரசனான சேரமான் அவர்களை தடுத்து, வனப்பிரதேசமான தனது தேசத்திற்கு குடியேறுமாறு திரும்ப தென்திசைக்கே வரவழைத்து, கங்கை குலத்தவருக்கு நாடுகளையும், காணிகளையும் ஏற்படுத்தி, உரிமை கொடுத்து சாசனங்கள் எழுதி கொடுத்தார்.
கொங்கு காணி பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி 48,000 வெள்ளாளர்களும், பசுங்குடி 12,000 செட்டிமார்களும், காஞ்சிபுரத்திலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தை 24 நாடுகளாக அமைத்துக் கொண்டு, தம்முடைய குலகுருக்களோடு குடியேறினார்கள் என்கிறது மரபாள சூளாமணி.
கங்க வெள்ளாளர்கள் என்பது பின்னாளில் மருவி, கொங்க வெள்ளாளர் என்றானது.
இன்று,
மொடவாண்டி கவுண்டர், தொண்டு வெள்ளாளர், பால வெள்ளாளர், நரம்புகட்டி கவுண்டர், திருமுடி கவுண்டர், சங்கு வெள்ளாளர், பூசாரி கவுண்டர் பவளங்கட்டி வெள்ளாளர் ரத்தினகிரி கவுண்டர் போன்ற பிற சாதிகளை குழப்பி கொங்க வெள்ளாளராகிய நம்முடன் சேர்த்து கொங்கு வேளாளர் என்று சர்க்கார் பெயரிட்டுள்ளது. கொங்க மங்கல வாழ்த்தில்
“கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை” என்ற வரி மூலம் நாம் இதை புரிந்து கொள்ளலாம்.
கொங்கு என்ற சொல் 18 கொங்க குடிகள்(68 ஜாதிகள்) வாழும் பிரதேசத்தை குறிக்கும்.
குலங்கோதுதல் :
கொங்க வெள்ளாளர் கல்யாணங்களில் “குலங்கோதுதல்” என்னும் சீர்னு ஒண்ணு இருக்கும்.
குலம் + கோத்திரம் + ஓதல் = குலங்கோதுதல்
கல்யாணத்தின் போது மாப்பிளை, பெண்ணின் குலம் கோத்திரத்தை சொல்லுதல் என்று பொருள். இன்னைக்கு நம்மில் பலபேருக்கு குலம், கோத்திரம் என்பதற்கே விளக்கம் தெரிவதில்லை.
கோத்திரம் என்பதை தான் இயல் தமிழில் கூட்டம்னு சொல்லுவாங்க.
கோத்திரம் என்றால் ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் ஆண்வழி வர்க்கம் (Paternal Lineage). ஆதலால் ஒரே கோத்திரத்தில் பிறப்பவர்கள் அண்ணன் தம்பி, அக்கா, தங்கச்சி முறையுள்ளவர்கள். அந்த காலத்தில் நாம் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததால், அந்த குடும்பம் விரிவடைந்த போது கோத்திரமாக மாறியது. நீண்ட கால பரம்பரையின் முதன்மையானவரின் பெயரே கூட்டம். உதாரணமாக ஓதாலன் என்பவரது மக்கள் ஒதால கோத்திரம்.
குலம் என்பது, ஒரு ஜாதிக்குள் இருக்கும் பல கோத்திரங்களை சேர்த்து மொத்தமாக சொல்வது. இந்த குலம், கோத்திரம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சில அடிப்படை கல்யாண விதியின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஒரே கோத்திரதிற்குள் கல்யாணம் பண்ண கூடாது. ஒரே குலத்திற்குள் உள்ள மற்றொரு கோத்திரத்திற்குள் தான் கல்யாணம் பண்ணோணும்.
குலம் மாறி கல்யாணம் செய்ய கூடாது. ஒரே குலத்திற்குள்(கங்கா குலம்) தான் பண்ண வேண்டும். இது காலங்காலமாக நாடு முழுக்க இருக்கும் ஒரு வழிமுறை.
கோயிலில் அர்ச்சனை செய்யும் போது ஐயர் என்ன குலம்னு கேட்டா கங்கா குலம் என்றும், என்ன கோத்திரம்னு கேட்டால் தங்களது கூட்ட பெயரான ஒதாலன் என்று சொல்வதுதான் முறை.